Diriya

உங்கள் பணத்தை பெருக்குவதற்கான சிறந்த முதலீட்டு யோசனைகள்

Grow Investment

எமது நாட்டில் தற்போது பணவீக்கம் நிலவுகின்றது. நீங்கள் மேலதிக வருமானத்தை ஈட்டுவதற்கு செயலற்ற வருமானம் உங்களுக்கு நிச்சயமாக உதவும். நீங்கள் தொழிலை இழந்தாலோ, நீங்கள் சுயவிருப்பின் பேரில் தொழிலிருந்து விலகினாலோ பணவீக்கம் உங்கள் கொள்வனவு சக்தியை குறைக்குமாயின், இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் செய்யும் செயலற்ற முதலீடானது நெருக்கடி மிக்க காலகட்டங்களில் மேலதிக வருமானமாக அமையும். இவ்வாறான இடர்பாடு கொண்ட காலங்களில் உங்களுக்கு உதவுவதற்கு ஏற்ற முதலீடுகள் மூலம் எவ்வாறு செயலற்ற வருமானத்தை ஈட்டிக் கொள்வது என்பதற்கான சில முதலீட்டு யோசனைகள் அடங்கிய வழிமுறைகள் சிலவற்றை கீழே பார்ப்போம்.

வாடகை சொத்துக்களுக்கான முதலீட்டு யோசனைகள்

வாடகை சொத்துகளில் முதலீடு செய்வது செயலற்ற வருமானத்தை ஈட்டுவதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகும். எனினும் இச் செயற்பாட்டிற்கு நாம் நினைப்பதை விட அதிக உழைப்பு தேவையாகின்றது. இதனை ஒரு இலாபகரமான செயலாக மாற்றுவதற்கு நீங்கள் அதிக நேரத்தை செலவிட வேண்டியது கட்டாயமாகும். உங்கள் சிறந்த செயற்பாட்டால் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் அதேவேளையில் அவ்வாறாக நேரத்தை செலவிடாத பட்சத்தில் உங்கள் முதலீட்டை இழக்க வேண்டிய அபாயத்தையும் சந்திப்பீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். இதனை சரியாக செயற்படுத்த கருத்தில் கொள்ளவேண்டிய மூன்று முக்கிய காரணிகள் உள்ளன. அவையானவன:

இத்தகைய சூழ்நிலையில் நாம் ஒரு சில கேள்விகளை கேட்பதன் ஊடாக எதிர்கொள்ளவேண்டிய அடிப்படை பிரச்சினைகளை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

வருமானத்தை பாதிக்கும் வகையில் ஏதேனும் ஒரு எதிர்மறையான காரணி ஏற்படுவதை முன்கூட்டியே மதிப்பீடு செய்வது சிறந்ததாகும். தற்போதைய இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி மிக்க காலகட்டத்தில் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். வாடகைதாரர்களால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளான வாடகை செலுத்த முடியாமை, அதேவேளை சொத்துக்கான அடமான தொகைகள் உங்களுக்கு பாக்கியாக இருக்கும் பட்சத்தில் அவற்றை செலுத்த வேண்டிய நிலை, நீங்கள் எதிர்பார்க்கும் தொகைக்கு சொத்தை வாடகைக்கு விட முடியாமை, இதனால் வருமானம் குறைவடைதல் போன்ற இக்கட்டான நிலைகளை சமாளித்து உங்களை தற்காத்துக் கொள்ள திட்டங்களை வழி வகுத்துக் கொள்வது சிறந்தது.

உங்கள் வர்த்தகத்தில் துணை சந்தைப்படுத்தல்களை ஏற்படுத்துங்கள்

துணை சந்தைப்படுத்தல் முறையில் எமது வர்த்தகத்தை இணைத்துக் கொள்வதால் இணையதள உரிமையாளர்கள் அவர்களின் பதிவுகளை தங்கள் சமூக ஊடக கணக்கில் அல்லது தளத்தில் விளம்பரப்படுத்துகையில் மூன்றாம் தரப்பினரின் இணையத்தள இணைப்புகளையும் சேர்த்துக் கொள்கின்றனர். அமேசன் நன்கு அறியப்பட்ட துணை நிறுவனமாக இருந்தாலும், eBay, Awin மற்றும் ShareAsale ஆகியவை போன்ற பெரிய வர்த்தக நாமங்களும் இணையாக செயற்படுகின்றன. இன்றைய வர்த்தக உலகில் இன்ஸ்டாகிராம் டிக்டாக் போன்ற தளங்கள் பொருட்கள் மற்றும் சேவைகள் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விளம்பரப்படுத்தவும் மிகவும் உறுதுணையாக உள்ளன. இவற்றுடன் இணைந்து உங்கள் மின்னஞ்சல் பட்டியலை இணைப்பதன் மூலம் உங்கள் வர்த்தகத்தை வளர்ப்பதோடு வாடிக்கையாளர் விரும்பும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய அறிவுறுத்தல்களை வழங்கலாம். ஆயினும் எப்பொழுதும் இந்த இணைந்த சந்தைப்படுத்தல் அனுகூலமாக இருக்கும் என்று கூற முடியாது. கோட்பாட்டின் அடிப்படையில் சமூக ஊடக கணக்கில் இணைப்பை சேர்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்றாலும் உண்மையில் உங்கள் இணையதளத்தில் வாசகர்களை ஈர்க்கக்கூடிய விளம்பரங்கள் இல்லாவிடில் அதனை அவர்கள் கிளிக் செய்ய மாட்டார்கள். இவ்வாறான நிலை ஏற்படுமாயின் எமக்கு எந்த ஒரு நன்மையம் கிடையாது.

எனவே இதில் காணப்படும் அபாயங்கள் என்ன? நீங்கள் இத்தகைய செயற்பாட்டை தொடங்கினால் இதில் உள்ள உள்ளடக்கத்தை உருவாக்கவும் உள்வருகையை அதிகப்படுத்தவும் அதிக நேரம் எடுத்து சிந்திக்கவேண்டும். அத்தோடு பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான சரியான வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும். இதில் உள்ள அபாயம் என்னவெனில் நீங்கள் அதிகப்படியான நேரம் எடுத்து வழிமுறைகளை கண்டுபிடிக்கும் அதேசமயம் உங்கள் பார்வையாளர்கள் அடுத்த பிரபலமான செல்வாக்கு மிக்க இன்னுமோர் சமூகஊடகத்திற்கு தாவிச் செல்ல வாய்ப்பு உள்ளது.

எனவே இதிலே எமக்கு கிடைக்கும் உண்மையான வாய்ப்பு என்ன? ஒரு பார்வையாளர் இணைப்பைக் கிளிக் செய்து மூன்றாம் தரப்பு துணை நிறுவனத்திடமிருந்து வாங்கும் போது> தளத்தின் உரிமையாளர் (வேறுவிதமாகக் கூறினால் நீங்கள்) கமிஷனைப் பெறுவீர்கள். இந்த கமிஷன் 3 முதல் 7 சதவீதம் வரை இருக்கலாம். எனவே வருமானத்தை ஈட்ட உங்கள் தளத்திற்கு குறிப்பிடத்தக்க உள் வருகையை ஏற்படுத்தலாம். எனவே உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு அல்லது அதிக லாபம் ஈட்டக்கூடிய தளத்தை(மென்பொருள், நிதிச் சேவைகள் அல்லது உடற்பயிற்சி போன்றவை) வைத்திருப்பதன் மூலம் உங்கள் முதலீட்டில் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு வழிகளில் நீங்கள் உங்கள் முதலீட்டின் மீதாக எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளாமல் வருமானத்தை ஈட்டிக் கொள்ள கூடிய சிறந்த வழிகளாகும். பொருளாதார நெருக்கடி மிக்க காலகட்டங்களில் இத்தகைய வருமானம் தரக்கூடிய ஆதாரங்களை வைத்திருப்பது ஒரு சிறந்த வழிமுறையாகும்.

பொருளாதாரத்திட்டமிடல் பற்றிய மேலதிக தகவல்களை திரிய இணையத்தளத்தில் பார்க்கவும்.

Exit mobile version