spot_imgspot_img

நிதி கல்வியறிவு மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

நிதி தொடர்பான கல்வியறிவு சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (SMEs) நிலைத்திருப்பதிலும் வெற்றியிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. குறிப்பாக இன்றைய வணிக சூழல் மாற்றம் மற்றும் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு முயற்சியாளர்கள் அடிப்படை நிதிக் கோட்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய தமது அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நிதி கல்வியறிவு என்பது தனிப்பட்ட மற்றும் வணிக நிதிகளை நிர்வகிப்பது பற்றிய தகவலறிந்த முடிவுகளை எடுக்க தேவையான நிதிக் கோட்பாடுகளின் அறிவு, திறன்கள் மற்றும் புரிதலைக் குறிக்கிறது. Remund (2010) குறிப்பிடுவதாவது, நிதி கல்வியறிவை சுருக்கமாகக் கூறலாம்: (1) நிதிக் கோட்பாடுகளின் அறிவு; (2) நிதிக் கோட்பாடுகளைப் பற்றித் தெரிவிக்கும் திறன் (3) தனியாள் நிதிகளை முகாமைத்துவம் செய்யும் திறமை (4) பொருத்தமான நிதி முடிவுகளை எடுக்கும் திறன் (5) எதிர்கால நிதித் தேவைகளுக்கு திறம்பட திட்டமிடுவதில் காணப்படும் நம்பிக்கை.

நிதியியல் கல்வியறிவு நிதி முடிவுகளின் மூலம் தரத்தையும், தர மேம்படுத்தல் மூலம் செயல்திறனையும் மேம்படுத்தலாம் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. SMEகளைப் பொறுத்தவரை, நிதி அறிக்கைகளைப் புரிந்துகொள்வது, காசுபாய்ச்சல் முகாமைத்துவம், வரவு செலவு திட்டம், முதலீட்டு தீர்மானங்கள் மற்றும் நிதிச் சந்தைகளுக்கான அணுகல் போன்ற பல முக்கிய பகுதிகளை நிதி கல்வியறிவு உள்ளடக்கியது. இந்த காரணிகள் SME களின் நிதி ஆரோக்கியம் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை கூட்டாக வடிவமைக்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கின்றன. SME களின் செயல்திறனில் நிதி கல்வியறிவின் தாக்கத்தை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியில் அதிக அளவிலான நிதி கல்வியறிவு கொண்ட SME கள் சிறந்த நிதி முகாமை  நடைமுறைகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மிகை இலாபம், காசுபாய்ச்சல் மற்றும் கடனிறுக்க வகையுடைமை பரீட்சிப்பை உறுதி செய்தல் போன்றன வழிவகுக்கின்றன. நிதியறிவு பெற்ற முயற்சியாளர்கள், தகவலறிந்து முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கும், காசுபாய்ச்சலை திறம்பட நிர்வகிப்பதற்கும், நிதி நிறுவனங்களுடன் சாதகமான விதிமுறைகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இடர்களை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் அவர்கள் சிறப்பாகப் செயல்படுகின்றனர், மேலும் இந்த காரணி நிலைத்துவமான நிதி நிலைக்கு வழிவகுக்கும். நிதியியல் கல்வியின் விளைவாக ஏற்படும் நிதி அறிவின் அதிகரிப்பு, தகவலறிந்து மற்றும் பயனுள்ள நிதி முடிவுகளை எடுக்க வழிவகுக்கும். நிதி கல்வியறிவின்மையின் விளைவுகள் பின்வருமாறு: வருமானத்தை விட அதிகமாக செலவு செய்தல்; பதிவுகளை பராமரிப்பதில் பற்றாக்குறை; தொடர்ச்சியாக முதலீட்டு திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்தாமல் இருப்பது; மற்றும் தவறான நிதி முடிவுகளை எடுப்பது ஆகும். மாறாக, முன் நிதியறிவு கொண்ட முயற்சியாளர்கள் வணிக செயல்திறன் மற்றும் விற்பனையில் மேலும் சில மேம்பாடுகளை வெளிப்படுத்துகின்றனர்.

மேலும், நிதியறிவு SMEகளின் சந்தைப் பங்கு மற்றும் வளர்ச்சி விகிதத்தை சாதகமாக பாதிக்கிறது. நிதிக் கருத்துகளைப் பற்றிய வலுவான புரிதலைக் கொண்ட முயற்சியாளர்கள், பயனுள்ள சந்தைப்படுத்தல் உத்திகளை உருவாக்கவும், வளர்ச்சி வாய்ப்புகளை அடையாளம் காணவும் மற்றும் வளங்களை திறமையாக ஒதுக்கவும் அதிக வாய்ப்பு காணப்படுகிறது. நிதியறிவு பெற்ற SMEகள், வணிக விரிவுபடுத்தலுக்கான நிதியைப் பெறலாம், வழங்குநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்தலாம் மற்றும் போட்டிச் சந்தைகளின் சிக்கல்களை சமாளிக்கலாம். மேலும், நிதி கல்வியறிவு SME கள் சிறந்த செயல்பாட்டு முடிவுகளை எடுக்க உதவுகிறது, இது உற்பத்தித்திறன், செலவுகளில் சேமிப்பு மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்க வழிவகுக்கிறது. நிதி முகாமைத்துவம் பற்றிய அறிவு இல்லாதது குறைந்தளவான புதிய வணிக முயற்சிகளை உருவாக்குவதற்கும், இறுதியில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) அதிக தோல்வி விகிதத்திற்கும் பங்களிக்கிறது. SME களின் இத்தகைய தோல்விகள் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும்.

முயற்சியாளர்களில் நிதி அறிவை புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும்மற்றும் காணப்படும் திறன்கள் அவர்களின் முடிவெடுக்கும் செயல்முறைகள், நிதி முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் ஒட்டுமொத்த வணிக செயல்திறன் ஆகியவற்றை நேரடியாக பாதிக்கிறது. SME உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களிடையே நிதி கல்வியறிவை மேம்படுத்துவது, மிகை இலாபம், காசுபாய்ச்சல், கடன்தொகை, சந்தைப் பங்கு, வளர்ச்சி விகிதம் மற்றும் செயல்பாட்டுத் திறன்  வளர்ச்சி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஏனைய அக்கறையுடையோர்கள் SME களின் தேவைகளுக்கு ஏற்ப நிதியியல் கல்வித் திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும். இது இன்றைய மாற்றமடையும் வணிக சூழலில் வெற்றிக்கு தேவையான கருவிகளை வழங்கி முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துகிறது.

வணிக உரிமையாளர்கள் பல்வேறு முறைகளில் நிதி அறிவை பெற்றுக்கொள்ளலாம். வணிக கடன்களை முறையாக பாவனை செய்ய பெரும் கல்வி அவற்றுள் ஒன்றாகும். கடனின் தற்போதைய நிலை மற்றும் கடன் மீள்செலுத்துகை புள்ளியை புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். கடன் வாங்க விரும்பும் சிறு வணிகங்கள், கடன் மதிப்பீடு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அவர்களின் கடன் மீள்செலுத்துகை புள்ளி கடன் மீள்செலுத்துகை காலம் மற்றும் வட்டி வீதத்தை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நிதி கல்வியறிவை அதிகரிப்பதற்கான மற்றொரு வழி, புதிய தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்வதாகும். குறிப்பாக புதிய நிதியியறிவு திறன்களைக் கற்கப் பயன்படும் தொழிநுட்பங்களை அறிந்திருக்க வேண்டும்.


Diriya Sri Lanka
Diriya Sri Lankahttps://www.diriya.lk
Diriya.lk is a sustainability and social innovation initiative of Dialog Axiata PLC. The content available herein is aimed solely for the purposes of educating, guiding and assisting Micro, Small and Medium Enterprises (MSMEs) in navigating the challenges of the fast paced business world. As such, Dialog Axiata PLC, its staff, its officers or Directors shall not be liable for any direct, indirect, incidental, special, consequential, or punitive damages or damages for any loss of profits, revenue, business, savings or data, incurred due to the use of the content available on Diriya.lk.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X